September 19, 2010

காதல் கதையின் கதாபாத்திரங்கள்

காதலன் (Hero) - காதலி - கொடூரன் (Villain)

மரங்களை வெட்டி
மண்ணை தோண்டி
கட்டிடங்களை உயர்த்தி
கால்களால் மிதித்து
காலையும் மாலையும் கொடுமைகள் செய்து
கற்பழிக்கும் கொடூரனாய் - மனிதன்

இவ்வனைத்து கொடுமைகளையும் அமைதியாய் அனுபவித்து
சட்டென்று பொங்கி எழும்
அழகு தேவதையாகிய காதலியாய் - பூமி

கொடுமையை கண்டு
வேதனை கொண்டு
ஏதும் செய்ய இயலாமல்
கண்ணீரை மழையாய் வடிக்கும் காதலனாய் - பூவானம்

No comments: