September 28, 2010

சமர்ப்பணம்

உன் உடல் பகிர்ந்து கருவாக்கினாய்
உன் சதை கிழித்து உருவாக்கினாய்
உன் குருதியை உணவாக்கினாய்
உன் உயிரை என் உடலாக்கினாய்

என் பசியறிந்து உணவளித்(தாய்)
என் மனவலியரிந்து மடிதந்(தாய்)
என் பிழைகளை திருத்தினாய்,தவறுகளை மன்னித்(தாய்)

என்னை பிரிந்து, என்னை எண்ணி கண்ணீர் வடிக்கும் தாயே

மழைத்துளியின் தூய்மை
தென்றலின் மென்மை
அக்னியின் இடர்ம்மை
பூமியின் பொறுமை
விண்ணின் வலிமை
இவ்வணைற்றும் உன் தாய்மைக்கு
- உன் சரணடியில் சமர்பிக்கிறேன்!

No comments: